search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கப் பத்திர வெளியீட்டு விலை கிராமுக்கு ரூ.50 குறைந்தது
    X

    தங்கப் பத்திர வெளியீட்டு விலை கிராமுக்கு ரூ.50 குறைந்தது

    • தங்கப் பத்தி ரங்களுக்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயித்து மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.
    • ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    சேலம்:

    மத்திய அரசு 2015-ம் ஆண்டு முதல் தங்க பத்தி ரம் முதலீட்டு திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி உத்தர வாதத்துடன் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டம் அரசு தபால் நிலையங்கள், வங்கி களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு பாது காப்பான முதலீடு ஆகும். குறைந்தபட்சம் 1 கிராம் முதல் 4 கிலோ வரையி லான மதிப்பு கொண்ட தங்கப்பத்திரங்களை தனிநபரும், 20 கிலோ வரை டிரஸ்டுகளும் பெற்றுக்கொள்ளலாம். தங்கத்தின் விலை 24 கேரட்டின் அடிப்படை யில் நிர்ணயம் செய்யப்படும்.

    ஆண்டுக்கு 2.5 சதவீதம் வீதம் வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை வங்கி கணக் கில் வரவு வைக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய தங்கத்தின் மதிப்பில் பணமாக பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற, பூர்த்தி செய்யப்பட்ட படிவம், பான் கார்டு நகல், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகிய வற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

    சேலம் மக்கள் ஆர்வம்

    ஒவ்வொரு ஆண்டும் சேலம், நாமக்கல் மாவட்டங்க ளில் இந்த திட்டத்தில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநக ராட்சியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலனோர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள னர். வங்கிகள், தபால் நிலையங்க ளில் தொழில் அதி பர்கள், பொதுமக்கள் பணம் கொடுத்து ஆர்வமாக தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்து வருகின்ற னர்.

    வெளியீட்டு விலை

    மத்திய அரசால் 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தங்கப்பத்திரம் திட்டத்தில் அப்போது ஒரு கிராமுக்கு ரூபாய் 3146 என விலை நிர்ணயிக்கப்பட்டது. நடப்பாண்டு 2023-2024 (தொடர்-I) தங்கப் பத்தி ரங்களுக்கான வெளியீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ.5926 என நிர்ணயித்து மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.

    இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து வெளியீட்டு விலையில் ஒரு கிராமுக்கு ரூ. 50 குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி இணையதளத்தில் விண்ணப்பம் செய்து டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்த முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரத்தின் வெளி யீட்டு விலை ஒரு கிராமுக்கு ரூ. 5,876-ஆக இருக்கும் என அறிவித்துள்ளது.

    Next Story
    ×