search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதாரங்களை திரட்டும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம்
    X

    ஆதாரங்களை திரட்டும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம்

    • கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
    • இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதி யைச் சேர்ந்த முத்துசாமி என்பவ ருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 4 பேர் மீது கடந்த மாதம் 13-ந்தேதி மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநி லத்தைச் சேர்ந்த ராகேஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார்.

    3 பேர் காயம் அடைந்த னர். மேலும் ஆலைக் கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 4 இளை ஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒரு இளைஞரின் வீடு ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் சாலையில் உள்ளது. இந்த இளைஞரின் வீட்டிற்கு யாரும் இல்லாதபோது போலீஸ் ஜீப்பில் வந்த தனிப்படை போலீசார், வீட்டின் கேட்டை திறந்து அங்கிருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து ஆய்வு செய்தனர்.

    அதேபோல் அங்கு கிடந்த வெற்று கேனை எடுத்து நுகர்ந்து பார்த்தனர். பின்னர் அந்த கேனை அங்கேயே போட்டு விட்டனர். தொடர்ந்து 6-க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து அந்த இளைஞர் ஆதாரங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தேடினார்கள்.

    அதுபோல் மற்ற இளைஞர்களின் வீடுகளுக்கும், அருகாமையில் உள்ள பகுதிகளுக்கும் சென்று தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் இதில் ஆதாரங்கள் கிடைத்ததா? என்பது தெரியவில்லை.

    தொடர்ந்து தனிப்படை போலீசார், வட மாநில இளைஞர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×