search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓமலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    ஓமலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    • சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகேயுள்ள சங்கீதப் பட்டி ஊராட்சியில் வெத்த லைக்கரனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைவரும் விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    குடியிருப்புகள் மற்றும் மக்கள் நெருக்கம் நிறைந் துள்ள இந்த பகுதியில் கல் குவாரி செயல்பட்டு வரு கிறது. இந்த குவாரியில் எந்தவித பாதுகாப்பு விதி முறைகளையும் கடைபிடிக் காமல் வெடி வைத்து பாறைகளை தகர்த்து எடுக்கின்றனர். அவ்வாறு வெடி வைக்கும்போது சிதறும் பாறை கற்கள் குடி யிருப்பு பகுதிகளை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும், கால் நடைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு களும் ஏற்பட்டுள்ளது.

    கல் குவாரியில் வைக்கப் படும் வெடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, பாதிக் கப்பட்டு வரும் கிராம மக்கள், அரசு அதிகாரி களிடம் தொடர்ந்து பல முறை புகரளித்தும், இது வரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அதி காரிகள் சிறு விசாரணை கூட செய்ய வரவில்லை என்று மக்கள் வேதனை யுடன் கூறுகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை கல் குவாரியில் பாறைக்கு வெடி வைத்து தகர்த்துள்ள னர்.

    அப்போது சிதறிய கற்கள் குடியிருப்பு பகு திக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியது. மேலும், அங்குள்ள இரண்டு சிறுவர்கள், கால்நடைகளை தாக்கி காயப்படுத்தியது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஆபத் தான முறையில் பறைகளை வெடி வைத்து தகர்க்கக் கூடாது என்று குவாரி நிர்வாகத்திடம் கூறினர். இங்கு வைக்கப்படும் வெடி எங்கள் உயிருக்கு பாது காப்பு இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது.

    பகல் நேரத்தில் கற்கள் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே விழுகிறது. அப் போது யாராவது வீட்டில் இருந்திருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று ஆதங்கத்துடன் கூறினர். அப்போது அங்கு வந்த ஊராட்சி தலைவர் ராஜா மணி ராஜா பொது மக்க ளுக்கு ஆதரவாக, சுற்றிலும் குடியிருப்புகள் நிறைந் துள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் பாறைகளுக்கு வெடி வைத்து குவாரி செயல்படுவதால் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.

    அதனால், இங்குள்ள மக்களின் உயிரை காக்க அதிகாரிகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியர், கனிமவள துறை அதி காரிகள், சுற்றுசூழல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×