கூரியர் நிறுவனத்தின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை

சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கூரியர் நிறுவனத்தின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை
Published on

சேலம்:

சேலம் மாமாங்கம் அருகே ஆன்லைன் கூரியர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் சகிரா என்பவர் நேற்று மாலை, வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இன்று காலை பணிக்கு வந்த சகிரா, கூரியர் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திரு ந்த ரூ.91 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கடைக்கு வெளியேயும், உள்ளேயும் இருந்த சி.சி.டி.வி. காமிராக்க ளையும் கொள்ளையர்கள் உடைத்துவிட்டு சென்றுள்ள னர். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com