search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலிச்செயின் பறிப்பு
    X

    நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் 7 பவுன் தாலிச்செயின் பறிப்பு

    • சேலம் சூரமங்கலம் அடுத்த குரங்குசாவடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனிதா குரங்குசாவடி அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அடுத்த குரங்குசாவடி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி அனிதா (வயது 37). இவர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் குரங்குசாவடி அருகே உள்ள பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில், அனிதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி மறைந்தனர்.

    இதுகுறித்து அனிதா அளித்த புகாரின் பேரில், சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறிக் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். சம்பவம் குறித்து இந்த பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியபோது, சமீப காலமாக வழிபறிக் கொள்ளையர்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. போலீசார் இதனை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

    Next Story
    ×