search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே  சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது
    X

    வாழப்பாடி அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (36), ஆத்தூர் பேட்டை செல்வம் (31), ஏத்தாப்பூர் முருகன் (41), இடையப்பட்டி ஞானசேகரன் (41), வடுகத்தம்பட்டி சரவணகுமார்(33), தும்பல் கோபி (23), காடையாம்பட்டி ஸ்ரீராம்(21), ஏத்தாப்பூர் சசி (25) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 11 வாகனங்கள், ரூ.4,060 ரொக்கம் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×