search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் செயின் அபேஸ்
    X

    ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7 பவுன் செயின் அபேஸ்

    • சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.
    • பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் சாமிநாயக்கன்

    பட்டி அடிக்காரை பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி விஜயா (வயது 47). இவர் சம்ப வத்தன்று சீல நாயக்கன்பட்டி பைபாசில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்சில் வந்தார்.

    பஸ்சை விட்டு இறங்கி வேறு பகுதிக்கு செல்வ தற்காக பேருந்து நிலை யத்தில் காத்திருந்தபோது, பையில் வைத்திருந்த மணிபர்ஸ் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த பர்சில் இருந்த 7 பவுன் டாலர் செயின் மற்றும் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து சேலம் டவுன் போலீசில் விஜயா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×