search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே தொழிலாளி தற்கொலை
    X

    வாழப்பாடி அருகே தொழிலாளி தற்கொலை

    • டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி வயது (37). இவரது மனைவி மணிமேகலை (34), இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். டிரைவரான இவர் தற்போது வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிக்குட்டை பகுதியில் உள்ள மாமானார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு அடிக்கடி சுப்ரமணி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். அதே போல நேற்று முன்தினம் மது குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு இருந்தார். அவரது மகன்கள் கூரை வழியாக சென்று வீட்டிற்குள் இறங்கி பார்த்த போது சுப்ரமணி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பின்னர் காரிப்ப்படி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×