search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வழியாக கேரளா சென்றரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது
    X

    சேலம் வழியாக கேரளா சென்றரெயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

    • தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    சேலம்:

    தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த ரெயிலில் இன்று அதிகாலை ஜோலார் பேட்டையில் இருந்து சேலம் ஜங்சன் வரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொது ரெயில்பெட்டியில் சீட் எண் 45-க்கு கீழ் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 பேக்குகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒடிசா மாநிலம் பெரம்பூர் பகுதிக்கு சென்று 4 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×