search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
    X

    அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    • சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு கே.பி. கரடு பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (22). ராசிபுரம் அடுத்த பாச்சல் தனியார் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஷாலினி (20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் ஒரே தெருவில் வசித்து வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து இருவரும் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு கேட்டு இரவு அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இது தொடர்பாக அவர்களின் பெற்றோரை அழைத்து போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து காதல் ஜோடியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×