ரூ.7 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் மாயம்

கண்ணன் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார். ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார்.
ரூ.7 லட்சம் எலக்ட்ரிக் பொருட்கள் மாயம்
Published on

சேலம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசப்பாக்கம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40). இவர் தனக்கு சொந்தமான லாரியில் எலக்ட்ரிக் பொருட்களை லோடு ஏற்றிக் கொண்டு கடலூரில் இருந்து கேளரா நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று சேலம் சூரமங்கலம் அருகே மற்றொரு லாரிக்கு லோடை மாற்றி உள்ளார். அப்போது லாரியில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் பொருட்கள் மாயமானதாக சூரமங்கலம் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com