search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் ரூ.3.7 லட்சம் அபராதம் வசூல்
    X

    சேலம் மாவட்டத்தில் ரூ.3.7 லட்சம் அபராதம் வசூல்

    • போலியான, உணவுக்கு ஒவ்வாத கேடு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு சேலம் டி.ஆர்.ஓ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • தொடர்ந்து 43 சிவில் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த சோதனையில் கலப்படம், தரமற்ற, பாதுகாக்கப்பட்ட உணவு பொருட்களை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதில் போலியான, உணவுக்கு ஒவ்வாத கேடு விளைவிக்க கூடிய உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு சேலம் டி.ஆர்.ஓ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    சிவில் பிரிவின் கீழ் பதியப்பட்ட 43 வழக்குகளில் 3.7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து டி.ஆர்.ஓ மேனகா உத்தரவிட்டார்.

    அதில் அதிகபட்சம் ஜவ்வரிசி தொடர்பான 7 வழக்குகளில் 1.11 லட்சம் ரூபாய், நாட்டு சக்கரை தொடர்பான 7 வழக்கில் 71 ஆயிரம் ரூபாய், மசாலா பொருட்கள் தொடர்பான 7 வழக்கில் 45 ஆயிரத்து 500 ரூபாய், இனிப்பு வகை தொடர்பான 3 வழக்கில் 12 ஆயிரம் ரூபாய் உள்பட மொத்தம் 3.7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    தொடர்ந்து 43 சிவில் வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.

    Next Story
    ×