search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகூர்த்த நாளையொட்டி மல்லிகை கிலோ ரூ.2,400-க்கு விற்பனை
    X

    முகூர்த்த நாளையொட்டி மல்லிகை கிலோ ரூ.2,400-க்கு விற்பனை

    • சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
    • நாளை முகூர்த்த நாள் என்பதால் மல்லிகை பூ கிலோ 2,400 ரூபாயக்கு இன்று விற்பனையானது.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் தேவை அதிகரித்தது. இதனால் பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நாளை முகூர்த்த நாள் என்பதால் மல்லிகை பூ கிலோ 2,400 ரூபாயக்கு இன்று விற்பனையானது. இதேபோல் முல்லை பூ, ஜாதிமல்லி, காக்கட்டான், நந்தியாவட்டம், சம்பங்கி ஆகிய பூக்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    Next Story
    ×