search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி அருகே ஆயுஷ் நலவாழ்வு சித்த மருத்துவ முகாம்
    X

    வாழப்பாடி அருகே ஆயுஷ் நலவாழ்வு சித்த மருத்துவ முகாம்

    • வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் இலக்குமணன், கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி அளித்தார்.

    இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பில் உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன. சிங்கிபுரம் நல வாழ்வு மைய செவிலியர்கள் கிரீஷ்மா, கனகராணி, அனுராதா, அபிநயா ஆகியோர் பரிசோதனை செய்தனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜன் நன்றி கூறினார்.

    Next Story
    ×