மேட்டூர் அனல்மின் நிலைய தொழிலாளி தவறி விழுந்து சாவு

மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.
நடராஜ் 
நடராஜ் 
Published on

மேட்டூர்:

மேட்டூர் அணையின் இடது கரையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம் மாநக ராட்சிக்கு குடிநீர் வினியோ கம் செய்யும் நீரேற்று நிலை யம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிருந்து சேலம் மாநகராட்சிக்கு தண்ணீர் எடுப்பதில்லை.

வாலிபர் பிணம்

இந்த நிலையில் இந்த நீரேற்று நிலையத்தின் அடிப்பகுதியில் தலையில் காயத்துடன் வாலிபரின் பிணம் ஒன்று கிடப்பதாக கருமலைக்கூடல் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபரின் உடலை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டனர்.

சாவில் சந்தேகம்

இதில் இறந்த வாலிபர் மேட்டூரை அடுத்த மாசி லாபாளையத்தை சேர்ந்த நடராஜ் (28) என்பதும், இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணி புரிந்து வந்ததும் தெரிய வந்தது. இதனிடையே நடராஜின் உறவினர்கள் அவரது சாவில் சந்தேகம் இருப்ப தாக தெரிவித்து உள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கருமலைக்கூடல் போலீ சார், அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com