search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி.கொரியர் நிறுவன ஊழியர் பலி
    X

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி.கொரியர் நிறுவன ஊழியர் பலி

    • கவுரிசங்கர்(வயது 34). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள மல்லிகுட்டை கிராமம் நெய்க்காரன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் கவுரிசங்கர்(வயது 34). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு கவுரிசங்கர் திரும்பினார்.

    கருக்குபட்டி என்ற இடத்தில் வந்தபோது தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கவுரிசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×