என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓமலூர் அருகே சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு
- சின்ன மொரப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
- தற்போது பக்கத்தில் உள்ள நில உரிமையாளர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சின்ன மொரப்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இந்த பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் என்பவர் எங்கள் ஊர் மக்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் மயானத்திற்கு கொடுத்தார்.
இந்த நிலத்தை சரி பார்த்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பெயரில் உள்ளது. மேலும் கிராம நிர்வாக அலுவலர் பதிவேட்டில் மயான பகுதி என்று காட்டப்பட்டுள்ளது.
தற்போது பக்கத்தில் உள்ள நில உரிமையாளர்கள் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர். இது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆகவே எங்கள் கிராமத்திற்கு சொந்தமான மயான பகுதியை மீட்டு தர வேண்டும். மேலும் எரிமேடை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்