அரசுப்பள்ளி மாணவர்களுக்கானமதிப்புமிகு மாணவர் விருது வழங்கல்

அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கானமதிப்புமிகு  மாணவர் விருது வழங்கல்
Published on

சேலம்:

சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ், 7-ம் அறிவு அறக்கட்டளை, அப்துல்கலாம் அறக் கட்டளை இணைந்து அரசுப்பள்ளி மாண வர்களுக்கான மதிப்புமிகு மாணவர் விருது வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் மாவட்ட நீதிபதியும், கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவருமான என்.பாரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். தலைவர் மனோகரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தனியார் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் முத்துசாமி, ஓய்வுபெற்ற நல்லாசிரியர் முத்து மாரையன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில், சேலம் மத்திய சிறை கண் காணிப்பாளர் வினோத், ஜி.எஸ்.டி. மற்றும் கலால் துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 55 அரசுப்பள்ளி மாண வர்களுக்கு மதிப்புமிகு மாணவர் விருதும், 15 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் வழங்கினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com