search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் நாளை தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்
    X

    சேலத்தில் நாளை தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம்

    • பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
    • தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நடத்தி வருகிறார்.

    செயல்வீரர்கள் கூட்டம்

    அந்த வகையில், சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நாளை (22-ந் தேதி ) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார். அதற்காக இன்று இரவு நாமக்கல்லில் இருந்து சேலம் வருகிறார்.

    அமைச்சர் உதயநிதிஸ்டா லினுக்கு மாவட்ட எல்லை யான மல்லூர் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் திரளாக பங்கேற்கிறார்கள். தொடர்ந்து சேலம் வரும் அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை ( 22 -ந் தேதி) காலை 10 மணியளவில் சீலநாயக்கன்பட்டியில் நடைபெறும் தி.மு.க. இளை ஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து சிறப்புரையாற்றுகிறார்.

    இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், இளைஞரணி அமைப்பா ளர்கள் அருண்பிரசன்னா, வீரபாண்டி பிரபு, மணிகண்டன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள இளைஞரணியினர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    இளைஞரணி செயல்வீ ரர்கள் கூட்டம் முடிந்ததும், பெத்தநாயக்கன் பாளையத்தில் இளைஞரணி மாநில மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அப்போது மாவட்ட செயலாளர் மற்றும் மாநாட்டு வழிகாட்டு குழுவினருடன் ஆேலாசனை நடத்துகிறார். பின்னர் அவர் காரில் கிருஷ்ணகிரி புறப்பட்டு செல்கிறார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையெட்டி அவர் செல்லும் வழிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    Next Story
    ×