search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி தொடக்கம்
    X

    பயிற்சியை டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து பேசிய காட்சி.

    மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி தொடக்கம்

    • 484 ஆண் பயிற்சி காவலர்களுக்கு மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.
    • பயிற்சி வகுப்புகளை டி.ஜிபி. சைலேந்திரபாபு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    மேட்டூர்:

    தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்ற வர்களில் 484 ஆண் பயிற்சி காவலர்களுக்கு மேட்டூரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. பயிற்சி வகுப்புகளை டி.ஜிபி. சைலேந்திரபாபு சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    அப்பொழுது அவர் பேசியதாவது:-

    பயிற்சி வகுப்புக்கு வந்துள்ள அனைவரும் ஏழை எளிய குடும்பத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளீ ர்கள். பயிற்சிப் பள்ளியில் அளிக்கப்படும் கவாத்து பயிற்சி, சட்ட பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் சிறப்பாக கற்றுக்கொள்ள வேண்டும்.

    மேலும் படித்து சப் -இன்ஸ்பெக்டர், துணை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் தேர்ச்சி பெற வேண்டும். பொது மக்களிடம் அன்போடு பழக வேண்டும். காவல் நிலையங்களில் பணிபுரியும் பொழுது புகார் தரும் பொதுமக்களிடம் பணிவு டன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    21 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்

    பயிற்சி வகுப்பில் தர்மபுரி, தூத்துக்குடி, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உட்பட 21 மாவட்டங்களில் இருந்து பயிற்சி காவலர்கள் கலந்து கொண்டார்கள். 7 மாத அடிப்படை பயிற்சியாக கவாத்து பயிற்சி, சட்ட பயிற்சி, துப்பாக்கி சூடு பயிற்சி, ஒழுக்கம், பொது மக்களிடம் அணுகுமுறை பற்றிய சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு அதன் பிறகு தமிழக காவல் துறையில் பணியாற்றுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராஜேந்தி ரன் தலைமையில் துணை முதல்வர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×