search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
    X

    தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

    • சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39).
    • சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ஜெயபிரகாஷ் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷை கன்னங்குறிச்சி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×