search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்குற்றத் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்
    X

    சேலம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்குற்றத் தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டம்

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேட்டில் உள்ள மாவட்ட போலீஸ்

    சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு செய்ய மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலைய

    எல்லைகளிலும் அதிகப்படியான சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த வேண்டும். பழுதடைந்த கேமராக்களை சரி செய்தல் வேண்டும். போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகளிலும் கேமிராக்கள் பொருத்த பொது மக்க ளுக்கு அறிவுறுத்த வேண்டும். மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் அதிக விபத்துக்கள் நடந்த இடங்களை கணக்கெடுத்து, அந்த இடங்களை போலீசார்

    கள ஆய்வு செய்து, அங்கு

    விபத்து தடுப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, புகை யிலைப் பொருட்கள், சந்துக் கடை களில் மது விற்பனை, கள்ளச் சாராயம் காய்ச்சுதல் உள்ளிட்டவற்றை ஒழிக்க

    கடுமையான நடவடிக்கை கள் எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூடுதல் போலீஸ்

    சூப்பிரண்டு கென்னடி, துணை போலீஸ் சூப்பி ரண்டுகள் விஜயக்குமார், ஆரோக்கியராஜ், சங்கீதா, ராமச்சந்திரன், ஹரிசங்கரி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×