search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குறைந்த விலையில் தக்காளி விற்பனை
    X

    குறைந்த விலையில் தக்காளி விற்பனை

    • தற்போது தக்காளியின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் அதிகரித்துள்ளது.
    • உழவர் சந்தைகளில் தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    தோட்டக் கலைத்துறையின் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. பொதுவாக தக்காளி மட்டுமல்லாது அனைத்து காய்கறிகளும் வரத்து மற்றும் வினியோகம் வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,200 மெட்ரிக் டன் அளவு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 15 நாட்களில் தக்காளி வரத்து குறைந்து 250 மெட்ரிக் டன் அளவே உற்பத்தி ஆகிறது. மேலும், தற்போது ராயக்கோட்டை தக்காளி சந்தையில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 50 மெட்ரிக் டன் தக்காளி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    பொதுவாக பருவம் தவறிய மழைப் பொழிவினாலும், கடந்த 2-3 மாதங்களாக தக்காளியின் விலை குறைந்ததின் காரணமாக விவசாயிகள் புதிய தக்காளி நடவு செய்யாமையினாலும், தற்போது தக்காளியின் உற்பத்தி குறைந்து விலையேற்றம் அதிகரித்துள்ளது.

    தற்போது தக்காளியின் விலையேற்றத்தை குறைக்கும் விதமாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் ஆகியோரின் ஆணைப்படி, மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகளில் விலை கட்டுப்படுத்தப்பட்டு தக்காளி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களாக தோட்டக்கலை துறையின் நடவடிக்கையின் மூலமாக தக்காளி விற்பனை விலை வெளிசந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தோட்டக்கலை துறையின் மூலம் தக்காளி நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் தக்காளியின் உற்பத்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தோட்டக்கலை துறையின் மூலம் இங்குள்ள விவசாயிகளிடம் தக்காளி நேரடியாக கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இதன் மூலம் தக்காளியின் விலை கட்டுக்குள் வைக்கப்படுகிறது. தோட்டக்கலை துறையின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யும் தக்காளியை பொதுமக்கள் பெற்று பயன் அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×