கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை

தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.
கலப்படம், தரமற்ற பொருட்கள் விற்பனை
Published on

சேலம்:

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவ லர் கதிரவன் தலைமையி லான குழுவினர் ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதி களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தரமற்ற உணவு பொருட்களை கண்டுபி டித்து நடவடிக்கை எடுக்கின்ற னர். மேலும் இது தொடர்பாக, சேலம் வரு வாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிமையாள ருக்கு அபராதமும் விதிக்கப்ப டுகிறது.

அதன்படி கடந்த மாதத்தில் மட்டும் 13 வழக்கு களில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதித்து வருவாய் அலுவ லர் மேனகா உத்தரவிட்டார். அதில், தரமற்ற உணவு பொருள் விற்றது, தரமற்ற ஜவ்வரிசி விற்றது, கலப்பட ஆயில் விற்றது உள்ளட்ட 13 வழக்குகளில் ரூ.1.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்களில் கலப்படம் செய்து, விற்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடைகளில் ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com