search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளத்தில் ரூ.57.50 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப்பணிகள் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
    X

    நிறைவுற்ற திட்டப் பணிகளை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

    விளாத்திகுளத்தில் ரூ.57.50 லட்சத்தில் நிறைவுற்ற திட்டப்பணிகள் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

    • ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்மாந்தை, வடக்கு செவல், கே.குமரெட்டி யாபுரம், எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களில் சமு தாய நலக்கூடம், அங்கன் வாடி மையம் மற்றும் பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி வளர்ச்சி திட்ட த்தின் கீழ் தலா ரூ. 5.50 லட்சம் மதிப்பீட்டில் மேல்மாந்தை, கே. குமரெட்டி யாபுரம் கிரா மத்தில் பயணியர் நிழற்குடை, கீழ விளாத்தி குளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியம் 2021-22 திட்டத்தில் ரூ. 6 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை மற்றும் எட்டயபுரம் பேரூ ராட்சி 3, 15-வது வார்டு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மே ம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் கட்ட ப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம், கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி உரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி, மார்க் கண்டேயன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், தாசில் தார்கள் ராமகிருஷ்ணன், மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், மாநில நெச வாளர் அணி செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், நவநீத கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா கண்ணு, விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளை ஞரணி துணை அமை ப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதி பாண்டியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×