search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.14.8 கோடியில் புனரமைப்பு பணிகள் மும்முரம்: புதுப்பொலிவு பெறும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம்
    X

    ரூ.14.8 கோடியில் புனரமைப்பு பணிகள் மும்முரம்: புதுப்பொலிவு பெறும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம்

    • மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்த திட்டம்
    • மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் மாதிரி புகைப்படம் வைக்கப்பட்டு உள்ளது

    கோவை,

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலையம் கடந்த 1873-வது ஆண்டு தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ்-அகல ரெயில் பாதைகளை உடைய மிகச்சில ரெயில் நிலையங்களில் மேட்டுப்பாளையமும் ஒன்று.

    மேட்டுப்பாளையம் - சென்னை இடையேயான நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இந்த பாதை வழியாகவே கோவை வந்துசெல்கிகிறது. மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை தினமும் சராசரியாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. அங்கு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகனப் போக்கு வரத்திற்காக அகலமான பாதைகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் தனி நடைபாதைகள், வாகனங்களுக்கான தனி நுழைவு, மற்றும் தனியாக வெளியேறும் வசதிகள், 2 சக்கர-4 சக்கர வாகனங்களுக்கு பிரத்யேக வாகன நிறுத்தம் ஆகியவை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளன.

    மேட்டுப்பாளையம் ரெயில்நிலைய வளாகமும் அழகுபடுத்தப்பட உள்ளது. மேலும் பிரதான நுழைவாயில், முன்ப திவு அலுவலகங்கள், காத்திருப்பு கூடம் மற்றும் கழிப்பறைகளின் உட்புறங்களும் மேம்ப டுத்தப்படுகிறது. ரெயில்கள் நிற்கும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பலகைகள் பயணிக ளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

    தொடர்ந்து நடைமேடை மேற்பரப்பு மேம்படுத்தப்படுகிறது. அங்கு கூடுதலாக நடை மேடை நிழற்கூரைகள் அமைய உள்ளன. மேலும் பழைய தங்குமிடங்கள் சீரமைக்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏற்றபடி, மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவது என திட்டமிடப்பட்டு உள்ளது. லிப்ட், எஸ்கலேட்டர் வசதி செய்து தரவும் அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் பாது காப்புக்காக கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படுகின்றன. இதுதவிர தூய்மையான குடிநீர் வசதி, மின்சார சிக்கனத்திற்காக ரெயில் நிலையத்தில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

    இத்தகைய சிறப்பம்சங்களுடன் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளது. இதற்காக அங்கு மாதிரி புகைப்படம் ஒன்றையும்தென்னக ரெயில்வே தற்போது வெளியிட்டு உள்ளது.

    Next Story
    ×