search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்: ஆர்பிஎஃப் குழு ரெயில் நிலையம் சென்றடைந்தது
    X

    ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கி தவிக்கும் பயணிகள்: ஆர்பிஎஃப் குழு ரெயில் நிலையம் சென்றடைந்தது

    • கனமழையால் ஸ்ரீவைகுண்டம்- செய்துங்க நல்லூர் இடையே தண்டவாளத்தில் சேதம்.
    • கனமழையால் ஸ்ரீவைகுண்டம் ரெயில்நிலையம் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் கனமழை பெய்ததால் திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட ரெயில் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம்- செய்துங்கநல்லூர் இடையே ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்ட இடம் மழை வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது. இதனால் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கியதால் ஸ்ரீவைகுண்டத்திலேயே ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    மேலும், ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பக்கங்கள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டன. இதனால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் தீவானது. இதனால் ரெயிலில் சுமார் 800 பயணிகள் சிக்கித் தவித்தனர். அவர்களில் சுமார் 400 பேர் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.

    சுமார் 300 பேர் ரெயில் நிலையத்திலேயே தவித்தனர். அவர்கள் உணவு, குடிநீ்ர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், வானிலை மோசம் காரணமாக உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதற்கிடையே ஆர்.பி.எஃப். குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஆகியவை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையம் புறப்பட்டனர். ஆனால், திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அவர்களால் விரைவாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆர்.பி.எஃப். குழு ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை அடைந்துள்ளது. அவர்கள் பயணிகளுக்கு உணவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் அந்த இடத்திற்கு சென்ற பிறகு அவர்கள் மீட்கப்படுவார்கள்.

    ஹெலிகாப்டரில் 2 டன் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×