கிருத்திகை நாளில் ஒற்றைக்காலில் முருகனை தரிசித்த சேவல்

கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.சுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
கிருத்திகை நாளில் ஒற்றைக்காலில் முருகனை தரிசித்த சேவல்
Published on

தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது. அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது.

பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com