search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் ரோபோ கண்காட்சி: வினாடி-வினா போட்டி
    X

    கண்காட்சி நடைபெற்றபோது எடுத்த படம். 

    மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் ரோபோ கண்காட்சி: வினாடி-வினா போட்டி

    • அறிவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
    • கண்காட்சியில் சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் ரோபோ எக்ஸ்போ 2023 என்ற நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை கண்காட்சியில் விளக்கி கூறினர். இதைத்தொடர்ந்து வினாடி-வினா போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முஜீப் முகம்மது முஸ்தபா, பேராசிரியை பிச்சம்மாள் மற்றும் கல்லூரி பிறதுறை தலைவர்களான சுப்புலட்சுமி, அனுலா பியூட்டி, அக்பர் உசேன், பிரின்ஸ், பர்வதவர்த்தினி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    Next Story
    ×