search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் செல்போன் கடையில் திருடிய  கொள்ளையன் கைது
    X

    திண்டிவனத்தில் செல்போன் கடையில் திருடிய கொள்ளையன் கைது

    • திண்டிவனத்தில் செல்போன் கடையில் திருடிய கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • திருடனை கைது செய்த போலீசாருக்கு ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் . இவர் திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே செல்போன் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் இன்று காலை கடையை திறப்பதற்காக வந்து பார்த்தபோது , கடையில் உள்ள ஷட்டருக்கு மேல் உள்ள இடைவெளியை பயன்படுத்தி உள்ளே சென்ற மர்ம நபர்களால் கடையில் இருந்த 18 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்ளையடி க்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று அங்குள்ள சி.சி.டிவி. காட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்து அந்த சி.சி.டிவி காட்சி அடிப்படையில் ரோசனை பகுதியை சேர்ந்த வினோத் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சில மணி நேரத்தில் திருடனை கைது செய்த போலீசாருக்கு ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார்.

    Next Story
    ×