குற்றாலத்தில் சாலையோர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. அபாய பள்ளங்களை உடனடியாக சரி செய்து வாகன விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமான சாலையை படத்தில் காணலாம். 
சேதமான சாலையை படத்தில் காணலாம். 
Published on

தென்காசி:

தென்காசியில் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வரும் நிலையில் பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் சாலைகளில் இடையிடையே அபாய பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும் இந்த சாலையானது மிகவும் குறுகலாக இருப்பதால் எதிரெதிரே கார், வேன் உள்ளிட்டவை வரும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிக்கி கீழே விழுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

எனவே பழைய குற்றாலம் முதல் மெயின் அருவி வரை செல்லும் சாலையில் காணப்படும் அபாய பள்ளங்களை உடனடியாக சரி செய்து வாகன விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கி வரும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com