search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுதுறை பகுதியில்  ரூ.35 லட்சம் மதிப்பில் தார்சாலைகள், வடிகால் சீரமைப்பு பணிகள்
    X

    ரூ.35 லட்சம் மதிப்பில் தார்சாலைகள், வடிகால் சீரமைப்பு பணிகள் கூட்டம் நடந்தது.

    ஆடுதுறை பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் தார்சாலைகள், வடிகால் சீரமைப்பு பணிகள்

    • பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    பேரூராட்சி செயல் அலுவலர் வி.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் கமலா சேகர் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோ.சி. இளங்கோவன், ஆர். வி. குமார், ரா. சரவணன், பரமேஸ்வரி, முத்துபீவி, மீனாட்சி, செல்வராணி, எஸ்.மாலதி, ம. க. பாலதண்டாயுதம், கண்ணன், கே.சாந்தி, எஸ்.சுகந்தி , எஸ்.சமீம்நிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கடந்த 75ம் ஆண்டு சுதந்திர தின மெகா பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது.

    பேரூராட்சி பொது நிதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் பத்தாவது வார்டில் சிறு பாலம் கட்டுவது, 12 வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு பணிகள் சீரமைப்பது, 13 வது வார்டில் மண் சாலைகளை தார் சாலைகளாக போடுவது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×