search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் சாலை பணியாளர்கள் பட்டை நாமம் அடித்து ஆர்ப்பாட்டம்
    X

    பட்டை நாமம் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலை பணியாளர்கள்.

    பாளையில் சாலை பணியாளர்கள் பட்டை நாமம் அடித்து ஆர்ப்பாட்டம்

    • சாலை பணியாளர்கள் சங்க ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் நெல்லை மண்டலம் சார்பில் பாளை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர்கள் நாராயணன், பரணிதரன், பாப்புராஜ், குமார் பாண்டி ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செய்யது தொடக்க உரையாற்றினார்.

    மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், காசிராஜ், முருகன் செந்தில் வேல், கிளாட்வின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநில பொரு ளாளர் தமிழ் நிறைவு உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களை கடந்த 2002- 2006-ம் ஆண்டு வரை பணிநீக்கம் செய்தனர். எனவே 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், பணி காலத்தில் உயிரிழந்த வர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நெற்றியில் பட்டை நாமம் அடித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×