search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
    • மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மற்றும் மன்னார்குடி ரெட் கிராஸ் சொசைட்டி வட்டக் கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மன்னார்குடியில் நடத்தியது.

    மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    வட்டாரப் போக்கு–வரத்து அலுவலக கண்காணிப்–பாளர் ராஜ்குமார், மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஓருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆன்டோ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    நிகழ்ச்சியில் மன்னார்குடி வட்ட கிளைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஜே. ஆர். சி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் ரமேஷ், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, சுகுணா, செங்கமலத் தயார் மகளிர் கல்லூரி கவியரசி, பவித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×