search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
    X

    நீலகிரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

    • பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி,

    தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்தநிலையில் ஊட்டி ஊரக போலீஸ் நிலையம் சார்பில் முத்தொரை பஜாரில் இருந்து முத்தோரை பாலாடா வரை போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஊட்டி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி விஜயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×