search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரவணம்பட்டியில் அரிசி கடையில் கொள்ளை
    X

    சரவணம்பட்டியில் அரிசி கடையில் கொள்ளை

    • கடையின் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த அரிசி மற்றும் பணத்ைத கொள்ளையடித்து சென்றார்.
    • அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    கோவை :

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ரஜேஷ் (வயத 36). இவர் அந்த பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டி விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார்.

    அப்போது கடையில் மேற்கூரையை பிரிந்து உள்ளே இறங்கிய மர்மநபர் கடையில் இருந்த 5 கிலோ அரிசி மூட்டை 6, 1 கிலோ அரிசி மூட்டை 7 என ரூ.2,345 மதிப்பிலான அரிசி மூட்டைகள், ரூ. 3 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து ஜெபஸ்டின் ராஜேஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அரிசி மூட்டை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×