search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீண்டாமை ஒழிய போராடியவர் புரட்சியாளர் அம்பேத்கர்- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. புகழஞ்சலி
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

    'தீண்டாமை ஒழிய போராடியவர் புரட்சியாளர் அம்பேத்கர்'- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. புகழஞ்சலி

    • பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் அம்பேத்கர் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர்
    • ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர் அம்பேத்கர்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ள தாவது:-

    பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்கிற பி.ஆர்.அம்பேத்கர், இன்றைய மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாவாதே என்னும் கிராமத்தில் பிறந்தவர். இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர்.

    உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். பட்டியல் இன மக்களுக்கு என்று கழகம் ஒன்றைத் தொடங்கியவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர் என்று, பல்வேறு போற்று தல்களுக்கு உரியவர் அம்பேத்கர்.

    பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் மிகச்சிறந்த அனுபவம் கொண்டவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

    இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990ல் இவருக்கு வழங்கப்பட்டது

    போற்றுதலுக்கு உரிய டாக்டர் அம்பேத்கரின் நினைவுநாள் இன்று (டிசம்பர் 6). இந்த நாளில், அவரரைப் போற்றி வணங்குவோம். இவ்வாறு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×