search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வு பெற்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டில்  27½ பவுன் தங்க நகைகள்- பணம் கொள்ளை
    X

    ஓய்வு பெற்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 27½ பவுன் தங்க நகைகள்- பணம் கொள்ளை

    • பீளமேட்டில் துணிகரம்
    • மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கோவை:

    கோவை விளாங்குறிச்சி அருகே உள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் முரளி (வயது 62). ஓய்வு பெற்ற தனியார் நிறுவன மேலாளர்.

    கடந்த 31-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் பீளமேடு புதூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு முரளி வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த வளையல், செயின், கம்மல், டாலர் உள்பட 27½ பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.7,500 ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பிய முரளி வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து முரளி பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்.

    மேலும் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் ஏதும் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×