search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழுதபடி தவித்த 3 சிறுவர்கள் மீட்பு
    X

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் அழுதபடி தவித்த 3 சிறுவர்கள் மீட்பு

    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் 3 சிறுவர்கள் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் சிறுவர்கள் 3 பேர் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் திருச்சி செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது நண்பர்களான 3 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததால் 3 பேரும் வீட்டை விட்டு வெளியேறி அரசு பஸ் மூலம் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.

    Next Story
    ×