search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் காயங்களுடன் திரிந்த குதிரை மீட்பு
    X

    ஊட்டியில் காயங்களுடன் திரிந்த குதிரை மீட்பு

    • ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க குதிரை சவாரியும் உள்ளது.
    • குதிரைகளின் காலை கயிறுகளால் கட்டி வைப்பது சட்ட விரோதம் என விலங்கின அமைப்பினா் தெரிவித்தனா்.

    ஊட்டி,

    ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க குதிரை சவாரியும் உள்ளது. இந்தநிலையில் குதிரை வெகுதூரம் சென்றுவிடக் கூடாது என்று கருதி அதன் காலில் கயிறுகளை கட்டி சிலா் சாலையில் அவிழ்த்து விட்டுள்ளனா்.

    இதனால் காலில் காயங்கள் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குட்டியுடன் உணவின்றி தவித்து வந்த குதிரை குறித்து விலங்கின அமைப்புத் தலைவா் நைசிலுக்கு புகாா்கள் வந்தன. இதனைத் தொடா்ந்து, ஹில்பங்க் பகுதியில் நடக்க முடியாமல் நின்றிருந்த குதிரையின் காலில் கட்டப்பட்டிருந்த கயிறுகளை விலங்கின ஆா்வலா்கள் அவிழ்த்துவிட்டனா்.

    குதிரைகளின் காலை கயிறுகளால் கட்டி வைப்பது சட்ட விரோதம் என விலங்கின அமைப்பினா் தெரிவித்தனா்.

    Next Story
    ×