search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆவுடையானூரில் பள்ளி அருகே இடிந்து விழுந்த ஊரணி சுற்றுச்சுவரை கட்ட கோரிக்கை
    X

    ஆவுடையானூரில் பள்ளி அருகே இடிந்து விழுந்த ஊரணி சுற்றுச்சுவரை கட்ட கோரிக்கை

    • ஊரணியின் கரைகளில் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள் இடிந்து 2 வருடங்கள் ஆகிறது.
    • விபத்துக்கள் ஏற்படும் முன் சுற்றுச்சுவரை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அருகே உள்ள ஊரணியின் கரைகளில் கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர்கள் இடிந்து 2 வருடங்கள் ஆகிறது. இதனை அதிகாரிகள் அனைவரும் பார்த்துவிட்டு உடனே சரி செய்து தருவதாக உறுதி அளித்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை.

    ஆவுடையானூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள், பள்ளி குழந்தைகள் இதன் அருகே செல்லும் சாலை வழியாக சென்று வருகின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதியும் வாகனங்கள் அவ்வழியே அதிகம் செல்வதால் பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பாக உடனடியாக ஊரணியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்குமார் என்பவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×