search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலத்தில் திடீர் இடி, மின்னலால் டிரான்ஸ்பார்மரில் பழுதுநள்ளிரவில் இருந்து மின் தடை
    X

    மயிலத்தில் திடீர் இடி, மின்னலால் டிரான்ஸ்பார்மரில் பழுதுநள்ளிரவில் இருந்து மின் தடை

    • மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது.
    • திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் லேசான மழை பெய்தது. அப்போது நள்ளிரவு 11 மணியளவில் திடீரென மின்னலுடன் கூடிய இடி இடித்தது. இதில் மயிலம் பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்க ப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இருந்த போதும் கீழ் மயிலம், ராஜீவ்காந்தி நகருக்கு மின்சாரம் வரவில்லை. இது தொடர்பாக இன்று காலை மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, பலத்த இடி, மின்ன லால் கீழ் மயிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது.

    இதனை சரிசெய்ய நடவடி க்கைகள் எடுக்க ப்பட்டு வருகிறது. இன்று மாலை 3 மணிக்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என கூறினர். திடீரென ஏற்பட்ட மின்தடையால் குடிநீர் விநியோகம் செய்ய ப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ள்ளாயினர்.

    Next Story
    ×