search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காக்காபாளையம் அருகே பரபரப்பு அரசு நிலத்தில் வைக்கப்பட்ட  சாமி சிலைகள் அகற்றம்
    X

    ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    காக்காபாளையம் அருகே பரபரப்பு அரசு நிலத்தில் வைக்கப்பட்ட சாமி சிலைகள் அகற்றம்

    • காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது.
    • அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம், காகாபாளையம் அருகே உள்ள கனககிரி கிராமம் உள்ளது. இங்குள்ள வேலப்பன் கோவில் அருகே உள்ள அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தில் வேலப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிலர் பிள்ளையார், கன்னிமார், காளியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர்.

    மேலும் 15 தென்னை மரங்களை நட்டும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சங்ககிரி வட்டாட்சியர், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ் பிரபு சப்-இன்ஸ்பெக்டர் ரகு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு வழிபாடு நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்பு அங்கிருந்த சாமி சிலைகளை அகற்றி டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×