search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீட்பு பணி குறித்த ஒத்திகை பயிற்சி
    X

    ஒத்திகை பயிற்சி நடந்தது.

    மீட்பு பணி குறித்த ஒத்திகை பயிற்சி

    • நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது, முதலுதவி செய்வது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில் திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் வடகிழக்கு பருவமழை கால படகு மற்றும் பணியாளர்கள் மூலம் உயிர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது . திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்புப் பணிகள் குறித்து காவிரி ஆற்றில் இறங்கி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.நீரில் மூழ்கிய வர்களைகாப்பாற்றுவது முதலுதவி செய்வது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் பொதுமக்கள்கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    Next Story
    ×