search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    கோப்பு படம்.

    வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட அணை கடந்த 10-ந் தேதி முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் மேலூர், கள்ளந்திரி பாசனத்துக்கும், அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்டம் பாசனத்துக்காகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் அணையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியது. இந்த நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 3169 கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 2352 கன அடி நீர் வருகிறது. அணையில் நீர் மட்டம் 65.16 அடியாக உள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.35 அடியாக உள்ளது. 1451 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 192 கன அடி நீர் வருகிறது 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.60 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 194 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தேக்கடி 2.2, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, ஆண்டிபட்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×