செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் சிவப்பு வண்ண தின கொண்டாட்டம்

விழாவில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சிவப்பு வண்ண உடையில் வந்து கலந்து கொண்டனர். மழலையர் பிரிவு ஆசிரியைகளும் சிவப்பு வண்ணப் பாடலைப் பாடினர்.
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் சிவப்பு வண்ண தின கொண்டாட்டம்
Published on

தென்காசி:

செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சிவப்பு வண்ண தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் சிவப்பு வண்ண கோட்டையாக அலங்கரிக்கப்பட்ட வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மழலையர் பிரிவு ஆசிரியை சிஞ்சுமோல் வரவேற்று பேசினார்.

இதில் மாணவ, மாணவி கள் மற்றும் ஆசிரியர்கள் சிவப்பு வண்ண உடையில் வந்து கலந்து கொண்டனர். விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பின் அடையாளமாக கருதப்படும் சிவப்பு வண்ணத்தை பற்றி பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பேசினர்.

மழலையர் பிரிவு மாணவி ரித்து மீனு சிவப்பு ஆப்பிள் குறித்து பேசினார். மாணவி அமிரா பர்வின் சிவப்பு வண்ண கரும்பள்ளி வண்டு குறித்தும், மாணவன் முகமது ஷபின் ரத்தத்தின் சிவப்பு வண்ணம் குறித்தும் பேசினர். மழலையர் பிரிவு ஆசிரியைகளும் சிவப்பு வண்ணப் பாடலைப் பாடினர்.

ஆசிரியை நந்தினி சிவப்பு வண்ணம் தொடர் பான விடுகதைகளை மாணவர்களிடம் கேட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். சிவப்பு வண்ண நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட புகைப்பட அறையில் அனை வரும் புகைப்படம் எடுத்து கொண்டனர். முடிவில் ஆசிரியை டயானா நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்ஷலா, மழலையர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அனுசியா ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com