search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய போது எடுத்த படம்.

    தூத்துக்குடியில் ரேஷன் கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

    • கூட்டுறவு நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் 100 பேர், எடையாளர்கள் 18 பேர் என மொத்தம் 118 பேர் தி.மு.க. தொழிற் சங்கத்தில் இணைத்து கொண்டனர்.
    • ரேசன்கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களை நீங்கள் தான் முறையாக அவர்களுக்கு வழங்கி ,அந்த பணிகளை நல்லமுறையில் செய்ய வேண்டும் என்று கீதாஜீவன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட வட்டார நிர்வாகிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் வேலாயுதம் தலை மை தாங்கினார். மாவட்ட செயலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் அல மேலு வரவேற்று பேசினார்.

    அதில் கூட்டுறவு நியாய விலைக்கடை விற்ப னையாளர்கள் 100 பேர், எடையாளர்கள் 18 பேர் என மொத்தம் 118 பேர் தி.மு.க. தொழிற் சங்கத்தில் இணைத்து கொண்டனர்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், தி.மு.க. தொழிற்சங்கத்தில் இணைந்த அனைவரையும் பாராட்டுகிறேன். தி.மு.க. ஆட்சி அமைந்தபின் நமது தலைவர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு திட்டங்களையும் தொலைநோக்கு பார்வையோடு அறிவிப்பு செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று பணி யாற்று கிறார்.

    அதனடிப்படையில் பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் அரசு வழங்கி வருகிறது. அந்த பொருட் களை நீங்கள் தான் முறையாக முறைப்படுத்தி அவர்களுக்கு வழங்கி இந்த அரசுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் இடத்தில் அமர்ந்துள்ளீர்கள் அந்த பணிகளை நல்லமுறையில் செய்ய வேண்டும். அதில் எதுவும் குறைபாடுகள் இருந்தால் எனது கவன த்திற்கு கொண்டு வாருங்கள் அதை அதிகாரிகளிடம் பேசி சரி செய்து தருகிறேன் என்று பேசினார்.

    தமிழக அரசால் புதிதாக நியமிக்கப்பட்ட நியாய விலைக்கடை விற்ப னையா ளர்கள் எடை யாளர்கள் சங்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டனர். கட்டுப் பாடற்ற பொரு ட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வலியுறுத்தக் கூடாது, அனைத்து வட்டார நிர்வாகி கள் அனைவரும் அந்தந்த விற்பனை யாளர்களை சந்தித்து சங்க உறுப்பின ர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பர மசிவன், துணைச் செயலாளர் சண்முகராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வராஜ், சிவன்முருகன், தொ.மு.ச. கண்ணுச்சாமி, தர்மராஜ் மற்றும் செண்பக ராஜ், மாவட்ட வட்டார நிர்வாகிகள் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×