ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

முகாமில் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் தொடர்பாக 316 மனுக்கள் பெறப்பட்டன.அதில் 235 மனுக்களுக்கு உடனே அந்த முகாமிலே தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர்.
ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாமில் டி.எஸ்.ஓ பாபு மனுக்களை பெற்றார்.
ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாமில் டி.எஸ்.ஓ பாபு மனுக்களை பெற்றார்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கலியபெருமாள் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஊராட்சிக்கு உட்பட்ட விளநகர், ஆறுபாதி, பால வெளி, மேட்டிருப்பு உள்ளி ட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் ஆகியவை தொடர்பாக 316 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 235 மனுக்களுக்கு உடனே அந்த முகாமிலே தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர். மீதமுள்ள 81 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும்,

அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றம் செய்யவும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார்.

இதில் தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன், வட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்சகாய ராஜ், அங்காடி விற்பனை யாளர்கள் முத்து, ஜெகதீ சன் மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com