டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேருவதற்கான நுழைவு தேர்வு

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும்.
டேராடுனில் உள்ள  ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேருவதற்கான  நுழைவு தேர்வு
Published on

ேசலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-

டேராடுனில் உள்ள இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2024 ஆண்டிற்கான (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) 8-ம் வகுப்பில் சேருவதற்கான ஆர்.ஐ.எம்.சி. தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது.

இத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு கட்டங்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வு ஆங்கிலம் கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு உட்பட குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடு ஆகும்.

விண்ணப்பதாரர்களின் (சிறுவர்களின்) பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 01.06.2024 அன்று 11 1/2 வயது நிரம்பி யவராகவும் 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது அவர்கள் 02.01.2011-க்கு முன்ன தாகவும் 01.07.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்ககூடாது. மேலும் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் 7-ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை , பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.04.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். மேலும், விவரங்களுக்கு ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்திலும், முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண் 0427-2902903 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com