என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
- ேராந்து பணி
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் தலைமையில் போலீசார் சீக்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொன்னையாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் மடக்கிபிடித்தனர்.
போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






